2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் குவிற்றோவா

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒன்பதாவது நாளான இன்று, உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான பெட்ரா குவிற்றோவா அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

தனது காலிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியை எதிர்கொண்ட செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் அவரை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற பெண்களுக்கான தனிநபர் பிரிவின் மற்றொரு காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லுசென்கோவாவை 2-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற ஐக்கிய அமெரிக்காவின் டேனியல் றோஸ் கொலின்ஸும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான தனிநபர் காலிறுதிப் போட்டியொன்றில், ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸா அகட்டை 7-5, 4-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் போராடி வென்ற கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான பிறிதொரு தனிநபர் காலிறுதிப் போட்டியொன்றில், ஐக்கிய அமெரிக்காவின் பிரான்ஸிஸ் தியபோயை 6-3, 6-4, 6-2  என்ற நேர் செட்களில் வென்ற உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .