Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 28 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆர்சனல் உடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே இரண்டு கோல்களையும், ஜோன் ஸ்டோன்ஸ் மற்றும் எர்லிங்க் பிறோட் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொப் ஹோல்டிங்க் பெற்றார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பிரென்ஃபோர்ட்டுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
அந்தவகையில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 75 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 73 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் சிற்றியும், 59 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும், அதே புள்ளிகளுடன் ஆனால் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றது. இதில், ஆர்சனல் இரண்டு போட்டிகள் அதிகமாக விளையாடியுள்ளதுடன், மன்செஸ்டர் யுனைட்டெட் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago