Shanmugan Murugavel / 2025 மே 28 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்சியாளரான டி. டிலிப், தேசிய அணிக் கட்டமைப்பு மீள அழைக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.
டிலிப்புக்கு ஓராண்டு தற்காலிக நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் டிலிப் பயணமாகவுள்ளார்.
முன்னதாக மே மாதம் ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்படாதென டிலிப், அபிஷேக் நாயர் உள்ளிட்டவர்களுக்கு கூறப்பட்டிருந்தது.
டிலிப், நாயர் போன்றோர் றோஹித் ஷர்மாவுக்கு நெருக்கமானவர்களெனக் கூறப்படுகின்ற நிலையில் கெளதம் கம்பீர் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஆதிக்கம் செலுத்தும் பொருட்டே இவர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையையும், கம்பீரையும் டிலிப்பை றோஹித் ஏற்றுக் கொள்ள வைத்துள்ளார்.
7 minute ago
12 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
24 minute ago
39 minute ago