Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படாத நிலையில், போர்ட் எலிஸபெத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, மழையால் 19.3 ஓவர்களுடன் இனிங்ஸ் முடிவுக்கு வந்தபோது 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 68 (39), அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் 56 (36) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தப்ரையாஸ் ஷம்சி 4-0-18-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 15 ஓவர்களில் 152 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, றீஸா ஹென்ட்றிக்ஸின் 49 (27), ஏய்டன் மார்க்ரமின் 30 (17), டேவிட் மில்லரின் 17 (12), மத்தியூ பிறீட்ஸ்கேயின் 16 (07), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 14 (12), அன்டிலி பெக்லுவாயோவின் ஆட்டமிழக்காத 10 (04) ஓட்டங்களோடு 13.5 ஓவர்களோடு வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஷம்சி தெரிவானார்.
தொடரின் மூன்றாவது போட்டியானது ஜொஹன்னஸ்பேர்க்கில் இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
50 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago