Shanmugan Murugavel / 2016 மார்ச் 30 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 91 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது. அவ்வணியின் இறுதி 4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் மாத்திரம் பெறப்பட்டு, 5 விக்கெட்டுகள் இழக்கப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில் கொலின் மன்ரோ 46 (32), கேன் வில்லியம்ஸன் 32 (28), கொரே அன்டர்சன் 28 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அவ்விலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 8.2 ஓவர்களில் 82 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் வெற்றி இலகுவாக்கப்பட்டிருந்தது.
துடுப்பாட்டத்தில் ஜேஸன் றோய் 78 (44), ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 32 (17), ஜோ றூட் ஆட்டமிழக்காமல் 27 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இஷ் சோதி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, ஜேஸன் றோய் தெரிவானார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago