Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
மாலைதீவுகளில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றதையடுத்தே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இந்தியா சார்பாக, சுனில் சேத்ரி இரண்டு கோல்களையும், மன்விர் சிங் ஒரு கோலையும் பெற்றனர். மாலைதீவுகள் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலி அஷ்ஃபக் பெற்றிருந்தார்.
இந்நிலையில், முன்னதாக பங்களாதேஷுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய நேபாளமும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பங்களாதேஷ் சார்பாகப் பெறப்பட்ட கோலை சுமோன் றெஸாவும், நேபாளம் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஞ்சன் பிஸ்டாவும் பெற்றனர்.
10 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago