Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுதற்கு சனத் ஜெயசூரிய தீர்மானித்துள்ளார். பாகிஸ்தானுக்கெதிரான இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றுப் போட்டிக்கு பின்னரே தனது முடிவை ஜெயசூரிய அறிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக இந்த முடிவை ஜெயசூரிய அறிவிக்காதபோதும், இந்த உலகக் கிண்ணமே தனது இறுதித் தொடரென ஏற்கெனவே தான் தீர்மானித்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த 2024 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்தே இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூரிய பதவியேற்றிருந்தார். ஜெயசூரியவின் கீழ் 27 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவுக்கெதிரான தமது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை வென்றதுடன், இங்கிலாந்தில் டெஸ்டொன்றை வென்றதுடன், நியூசிலாந்துக்கெதிராகவும் 2-0 என டெஸ்ட் தொடரொன்றில் வென்றிருந்தது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago