2024 மே 15, புதன்கிழமை

இலங்கையணியின் தேர்வாளர்களாக தரங்க, மென்டிஸ்

Mithuna   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வாளர் குழுத் தலைவராக இலங்கையணியின் முன்னாள் தலைவரான உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபை உறுதிப்படுத்தியுள்ளது.

அஜந்த மென்டிஸ், இந்திக டி சேரம், தரங்க பரணவிதான, டில்ருவான் பெரேராவை உள்ளடக்கிய ஐவர் கொண்ட தேர்வாளர் குழுவுக்கு தரங்க தலைமை தாங்கவுள்ளார்.

இக்குழுவானது தமது முதலாவது பணியாக சிம்பாப்வேக்கெதிரான தொடருக்கான அணியைத் தெரிவு செய்யவுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு இதேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரமோதய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவை சபை விரும்பியபோதும் விளையாட்டமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ புதுமுகங்களை தெரிவு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .