2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

உலக இருபதுக்கு-20: 'எங்களது நாளில்லை'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 31 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழுநிலைப் போட்டிகளில் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த நியூசிலாந்து அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற எதிர்பார்த்திருந்த போதிலும், இங்கிலாந்து அணியால் தோற்கடிக்கப்பட்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்திருந்தது. நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருந்தாலும், பின்னர் அதிரடியாக ஆடியிருக்கவில்லை.

'130க்கு 3 என்ற நிலையில் இருந்தோம். நீங்கள் விளையாடும் எந்தவொரு இருபதுக்கு-20 போட்டியிலும், அது சிறந்த அடித்தளமாகும். அதை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கவில்லை. நாங்கள் முன்னேற வேண்டிய இடங்களில் அது ஒரு சிறிய பகுதியாகும். நாங்கள் முயலாலாததால் அது நிகழவில்லை, அத்தோடு இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. இருபதுக்கு-20 போட்டிகள், நிலையற்றனவாகும். இன்று (நேற்று ) அது எங்களது நாளாக இருக்கவில்லை" என்றார்.

நியூசிலாந்தின் அதிரடி வீரர்களான லூங் ரொங்கி, கொரே அன்டர்சன் இருவரும், full toss பந்துகளுக்கே ஆட்டமிழந்திருந்த போதிலும், அதற்கு முன்னர், சிறப்பாகப் பந்துவீசி, அழுத்தத்தை இங்கிலாந்து அணி ஏற்படுத்தியிருந்ததாக வில்லியம்ஸன் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .