Shanmugan Murugavel / 2016 மே 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பை, தொடர்ந்தும் இலவசமாகப் பேணுவதற்கான முக்கிய தீர்ப்பொன்றை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டு ஒளிபரப்புச் சட்டத்தின்படி, இந்தியா பங்குபற்றும் போட்டிகளில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் அனைத்துக்கான ஒளிபரப்புக் காணொளியை, போட்டி நேரடியாக ஒளிபரப்பாகும் நேரத்தில், விளம்பரங்கள் இல்லாமலும் அனுசரணையாளர்களின் இலச்சினைகள் இல்லாமலும், அரச ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்கு வழங்க வேண்டும். இதன்மூலம், முக்கிய போட்டிகள் அனைத்தும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது அகில இந்திய வானொலி மூலமாகவோ, அப்போட்டிகள், ஒளி/ ஒலிரப்பாகும்.
எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அல்லது சர்வதேச கிரிக்கெட் சபை ஆகியவற்றினால் வழங்கப்படும் அனுசரணையாளர் இலச்சினைகளை, இல்லாது செய்ய முடியாது எனத் தெரிவித்து, ஸ்டார் இந்தியா நிறுவனம், வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அந்த இலச்சினைகளும், விளம்பரங்களாகவே கருதப்பட வேண்டுமெனத் தெரிவித்தள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .