2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

கௌஷால் சில்வாவுக்கு பூரண சுகம்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலையில் பந்து தாக்கி, காயமடைந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வாவுக்குப் பூரண சுகம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வைத்தியசாலையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட கௌஷால் சில்வா, இரண்டு நாட்கள் பூரண ஓய்வை எடுத்த பின்னர், மெதுவான பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பிப்பார் எனவும், அடுத்த வாரமளவில் துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபடுவார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட கௌஷால் சில்வாவுக்கு, நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லையென வைத்தியர்கள் அறிவித்த நிலையில், பூரண சுகமடைந்தவர் என்றே அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல், உடல்ரீதியான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு வழங்கப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.

தன்னுடைய உபாதை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கௌஷால் சில்வா, 'எனக்குச் சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய்து, இந்நிலைக்கு நான் வர உதவிய இலங்கை கிரிக்கெட் சபை, அஞ்சலோ மத்தியூஸ், சனத் ஜெயசூரிய ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சில நாட்களுக்கு நான் ஓய்வெடுப்பேன், ஆனால், மைதானத்தில் விரைவில் களமிறங்கி, சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.

பல்லேகெலயில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டினேஷ் சந்திமால் அடித்த பந்து, அவரது தலைக்கவசத்தையும் தாண்டி அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .