Editorial / 2018 மார்ச் 01 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.
றொச்டேல் அணியுடன் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தமையைத் தொடர்ந்து, தமது மைதானத்தில் குறித்த போட்டி மீண்டும் இடம்பெற்ற நிலையில் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றே காலிறுதிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, பெர்ணான்டோ லொரென்டே மூன்று கோல்களையும் சண் ஹெயுங் மின் இரண்டு கோல்களையும் கைல் வோக்கர்-பீற்றர்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். றொச்டேல் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டீபன் ஹும்பிறீஸ் பெற்றார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026