2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சமநிலையில் நாப்போலி – ஏ.சி மிலன் போட்டி

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நடப்புச் சம்பியன்களான நாப்போலியின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஒலிவியர் ஜிரூட் பெற்றதோடு, நாப்போலி சார்பாக மட்டியோ பொலிடானோ, ஜியம்கொமோ றஸ்படோரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற றோமாவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் துராம் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .