2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சிக்கலில் ஸ்டோக்ஸ்

Editorial   / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், பொருத்தமற்ற கருத்தை முன்வைத்தமைக்காக, எச்சரிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இந்த எச்சரிக்கையோடு, அவருக்கு 1 தண்டனைப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2 தண்டனைப் புள்ளிகளைக் கொண்டிருந்த அவர், தற்போது 3 தண்டனைப் புள்ளிகளுடன் காணப்படுகிறார்.

4ஆவது தண்டனைப் புள்ளியை அவர் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அல்லது 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் தடைசெய்யப்படுவார்.

மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் 101ஆவது ஓவரில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை, 4 ஓட்டங்களுக்கு ஷாய் ஹோப் அடித்தார். அதன்போதே, பொருத்தமற்ற கருத்துகளை பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .