2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

துடுப்பெடுத்து ஆடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

Editorial   / 2024 மார்ச் 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் திகதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஞாயிற்றுக்கிழமை (24)  இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, மாலை 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

 இந்நிலையில் ராஜஸ்தான் - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்காக நாணயம் சுண்டப்பட்டது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X