2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பி‌சி‌சி‌ஐ இன் திறைசேரி சென்னையில் இருந்து மும்பைக்கு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக பதவியேற்றதின் பின் முதலாவது நடவடிக்கையாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் திறைசேரி அலுவலகத்தை, சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றியுள்ளார். இதன் மூலம் தான் பதவிக்கு முன் நிறைவேற்றுவதாக உறுதியளித்த ஒரு நடவடிக்கைகையை செயற்படுத்தியுள்ளார்.

இது தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் யாப்பை தரவேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.  

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அனைத்து அலுவலகங்களையும், அனைத்து கோப்புக்களும் ஒரே இடத்தில் இருப்பதை தலைவர் விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .