Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் நடைபெறுகின்ற பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் முதல்நிலைவீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ புஸ்டாவை எதிர்கொண்ட சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்வை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது காலிறுதிப் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான டேனியலி றோஸ் கொலின்ஸை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின், 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில் ஜேர்மனியின் லோரா சைகெமுண்டை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்ரா குவித்தோவா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026