2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் சாதனை

Editorial   / 2023 மே 15 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டிவிசன் ‘சி’ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்  சம்பியனாகியுள்ளது.

கொழும்பில் சனிக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென். பிரிட்ஜெட்ஸ் கல்லூரி அணியினை முதல் கால் பாதியில் 4:4 ரீதியிலும், இரண்டாவது கால்பாதியில் 8:8 ரீதியிலும், மூன்றாவது கால்பாதியில்16:10 ரீதியிலும், நான்காவது கால் பாதியில் 26:14 ரீதியிலும் கைப்பற்றி யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட 16 வயது பிரிவு  போட்டியில் வடமாகாண பாடசாலை ஒன்று  முதலாவது சம்பியனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜெபோஷினி கைசிங் ரவீந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் சிறந்த தற்காப்பு வீராங்கனையாக விஜயரூபன் சகானா தெரிவானார்.

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட  கூடைப்பந்தாட்ட அணிக்கு தனுஸ்காந்த் ராஜசோபனா பயிற்றுவிப்பாளரராக கடமையாற்றுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X