2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ரிங்கு - பவல் இணையின் அபார ’டாண்டம்’ கேட்ச்

Mayu   / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், எல்லையோரக் கோட்டிற்கு அருகே ரிங்கு சிங் மற்றும் ரோவ்மன் பவல் இணைந்தெடுத்த கேட்ச் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

லக்னோ அணியின் வீரர் அடித்த பந்து சிக்ஸராகச் செல்லவிருந்த நிலையில், எல்லைக்கோட்டில் நின்றிருந்த ரிங்கு சிங் பாய்ந்து பந்தைப் பிடித்தார். 

ஆனால், தனது உடல் சமநிலை தவறி எல்லைக்கோட்டைத் தொடப்போவதை உணர்ந்த அவர், ஒரு நொடியும் தாமதிக்காமல் பந்தை அருகில் இருந்த ரோவ்மன் பவலிடம் தூக்கி எறிந்தார். அதனை லாவகமாகப் பிடித்த பவல் விக்கெட்டை உறுதி செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .