2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: பூப்பந்தாட்ட இறுதியில் இந்திய வீராங்கனை சிந்து

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில், தரவரிசையில் ஆறாம் இடம் வகிக்கும் ஜப்பானிய வீராங்கனையான நொஸோமி ஒகுஹராவைத் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இன்று மாலை 6.55க்கு ஆரம்பமாகவுள்ள இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெனியின் கரோலினா மரினை 21 வயதான தரவரிசையில் 10ஆம் நிலையில் இருக்கும் சிந்து எதிர்கொள்கிறார்.

உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சீனாவின் லி ஸூரியைத் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு கரோலினா தகுதி பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .