2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்ட ஸவ்ரேவ், பிறிட்ஸ்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், நான்காம் நிலை வீரரான டெய்லர் பிறிட்ஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் கரென் காஞ்சனோவ்வை எதிர்கொண்ட ஜேர்மனியின் ஸவ்ரேவ், 3-6, 6-4, 6-7 (4-6) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை தனது அரையிறுதிப் போட்டியில் ஏழாம் நிலை வீரரான பென் ஷெல்டனை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பிறிட்ஸ், 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தனது அரையிறுதிப் போட்டியில் கஸக்ஸ்தானின் எலெனா றைபகினாவை 1-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று கனடாவின் விக்டோரியா எம்போக்கோ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதேவேளை டென்மார்க்கின் கிளாரா டெளசனை 6-2, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு ஜப்பானின் நயோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .