Shanmugan Murugavel / 2021 ஜூலை 07 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பெய்னுடனான அரையிறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றிருந்தது.
வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், மேலதிக நேரத்தில் கோலெதுவும் பெறப்பட்டிருக்கவில்லை.
இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை பெடெரிக்கோ சியெஸ்கா பெற்றதோடு, ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றிருந்தார்.
பெனால்டியில், ஸ்பெய்னின் டனி ஒல்மோ கோல் கம்பத்துக்கு வெளியால் தனது உதையைச் செலுத்தியதோடு, அல்வரோ மொராட்டாவின் உதையை இத்தாலியின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொனருமா தடுத்திருந்தார். இத்தாலியின் மனுவல் லொகாடெல்லியின் உதையை ஸ்பெய்னின் கோல் காப்பாளர் உனை சிமோன் தடுத்திருந்தார்.
16 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago