2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்ட ரூ.93 இலட்சம் செலவு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

குருக்கள் மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு 93 இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் செலவாகும் என்றும் இதை தோண்டுவதற்குரிய ஏற்பாடுகளை உரிய தரப்புக்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்றும் களுவாஞ்சிகுடி பொலிஸார், நேற்று வியாழக்கிழமை, களுவாஞ்சிகுடி நீதிறமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டுவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான சிப்லி பாறூக்கினால், கடந்த மாதம் 2ஆம் திகதி களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்த புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலேயே, இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி ஏ.எம்.றியாழ், அடுத்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் 29ஆம்; திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

1990ஆம் ஆண்டு, காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் கல்முனையிலிருந்து காத்தான்குடிக்கு சென்று கொண்டிருந்த போது குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் சடலங்கள், குருக்கள்மடம் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X