2025 மே 07, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவில்  754 பேர் பட்டம்பெறவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.  

வந்தாறுமூலை வளாக பேரவை மண்டபத்தில் புதன்கிழமை(26) மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர்  இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பட்டமளிப்பு விழாவானது வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடபெறுவுள்ளது.   இம்முறை  பட்டமளிப்பு விழாவில் 754 பேர் பட்டம் பெறவுள்ளனர். வழமையாக இரண்டு நாட்கள் நடைபெறும் பட்டமளிப்பு விழா நிகழ்வானது இம்முறை ஒரே நாளில் மூன்று தொகுதிகளாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க  கலந்துகொள்ளவுள்ளார்.

பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உரிய நேரத்திற்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும்.

ஏப்பிரல் மாதம் 5ஆம்; திகதி காலை 9 மணி முதல் முதலாவது தொகுதியாக 207 பேருக்கும், 12 மணி முதல் இரண்டாவது தொகுதியாக 243 பேருக்கும் மாலை 2 மணி முதல் முன்றாவது தொகுதியாக  304 பேருக்கும் என மூன்று தொகுதிகளாக 754 மாணவர்களுக்குப் பட்டமளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நான்கு மாணவர்களுக்கு தங்க விருதுகளும் மேலும் பத்து மாணவர்களுக்கு பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X