2026 மே 13, புதன்கிழமை

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் 6 கால்களுடன் கன்று குட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்தில் எருமை மாடு ஒன்று 6  கால்களுடைய கன்று குட்டியொன்றை ஈன்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கால்நடை வைத்தியசாலை அதிகாரிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்தார்.

இக் கன்றின் மேலதிக இரு கால்களையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் செல்லையா உதயராணி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .