Niroshini / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில்,கல்வி அமைச்சு 'அன்பின் கல்விக் கூடம்' எனும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.இதுதொடர்பான நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் கண்டி வலய உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி.விஜயனந்தினி ஜெயசூரிய ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது,மட்டக்களப்பு மற்றும் கண்டி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.


32 minute ago
46 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
4 hours ago
4 hours ago