Suganthini Ratnam / 2016 ஜனவரி 18 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 65 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் மாணவச் சிறுவர்கள் இந்த வருடம் சத்துணவு வழங்கும் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் ; உத்தியோகபூர்வமாக ஏறாவூர் அல்-ஜுப்ரிய்யா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், மாணவர்களின் கல்வியை விருத்தி செய்து சிறப்பான கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில்; அரசாங்கம் பல சலுகைகளை வழங்குகின்றது. அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்' என்றார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .