2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

119 ஆவது ஜனன தினத்தையொட்டி இரத்ததானம்

Thipaan   / 2017 மார்ச் 31 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 119 ஆவது ஜனன தினத்தையொட்டி, கட்சியின்  மட்டக்களப்பு அலுவலகத்தில், நேற்று (31) இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

முதலில் தந்தை செல்வாவின் உருவப் படத்துக்கு கட்சியின் பிரமுகர்கள் மாலை அணிவித்தைத் தொடர்ந்து இரத்ததான நிகழ்வு ஆரம்பமானது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராஜா  உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் குருதியின் மாதிரிகளைச் சேகரித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .