2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இரு வீடுகளில் பணமும் நகைகளும் திருட்டு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறுக் கிராமத்திலுள்ள  வீடொன்றில்  17 பவுண் தங்கநகைகளும் பணமும்  சனிக்கிழமை (8) இரவு திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, புதிய காத்தான்குடியில்; 10 பவுண் தங்கநகைகளும்  10,500 ரூபாய் பணமும் திருட்டுப் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த இரு வீடுகளையும் உடைத்துக்கொண்டு சென்ற திருடர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .