2025 ஜூன் 25, புதன்கிழமை

'எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்   

கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேற்கொண்டுள்ள கள விஜயங்களை முன்மாதிரியாகக் கொண்டு கிழக்கு மாகாண சபையிலுள்ள ஏனைய அமைச்சர்களும் செயற்பட வேண்டும்.இதனூடாக யுத்தத்தில் நலிவடைந்துள்ள மக்களை மேலோங்கிக் கொண்டு வரமுடியும்.

எனவே அனைவரும் எமது மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் முதல் மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள குறை, நிறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
 
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சருடன் சேர்த்து 5 அமைச்சர்கள் உள்ளார்கள் ஆனாலும், முதலமைச்சரின் கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கு முதலமைச்சர் தலைமையில் உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள குறை நிறைகள் பற்றிக் கேட்டறித்து  அக்குழுவினர் உள்ளூராட்சி சபைகளில் காணப்படும் குறைபாடுகளை ஒருமாத காலத்துக்கு நிவர்த்தி செய்து தரப்படும் எனவும் உறுதியளித்துச் செல்கின்றனர். இவ்வாறான விடையங்கள் பாராட்டப்பட வேண்டியவைகளாகும்.
 
அதேபோல்,கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய 4 அமைச்சுக்களின் கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கும் அந்த, அந்த உரிய அமைச்சரிகளின் தலைமையிலான குழுவினர்கள் கள விஜயங்களை மேற்கொண்டு குறை நிறைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டுக்க வேண்டும்.
 
இவ்வாறு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அடங்கிய குழுவினர்கள் திணைக்களங்களுக்கு விஜயங்களை மேற்கொள்கின்றபோது மிகவிரைவில் கிழக்கு மாகாணமும் பாரிய அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்லும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .