2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'காணாமல் போனவர்களுக்கு வலுக்கட்டாயமாக மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் கடந்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு வலுக்கட்டாயமான முறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.  

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களின் கருத்தறியும் அமர்வு நேற்று வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே அவர்கள் இதனைக் கூறினார்.

இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'காணாமல் ;போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்யும்போது, காணாமல் போனவர்கள் என்ற சொல்லுக்கு பதிலாக உயிரிழந்துவிட்டனர் என்று முறைப்பாடுகள் பதிவுசெய்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் சிங்களமொழிகளில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதனால் தங்களால் அதனை வாசித்து அறியமுடியவில்லை.

தமது பிள்ளைகளை கடத்திச்சென்றவர்கள் தொடர்பான விவரங்களை தாங்கள் வழங்கியுள்ளபோதிலும், இதுவரையிலும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்' என்றனர்.  
'மேலும், இலங்கையின் தேர்தல் முறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். கடத்தல் மற்றும் காணமல்போனவர்கள் சம்பத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் இன்றும் தங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.

காணமல்போனவர்களினை கண்டறியும் அலுவலகம் திறக்கப்பட்டதனையும் வரவேற்றுள்ள அவர்கள், அதன் அலுவலகத்தினை மட்டக்களப்பிலும் அமைக்கவேண்டும் என்பதுடன் அதில் பணியாற்றுவதற்கு தமது உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் எனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இங்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X