Suganthini Ratnam / 2016 நவம்பர் 24 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் அமைந்துள்ள பலசரக்குக் கடை ஒன்றிலும் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றிலும் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பலசரக்குக் கடையிலிருந்து 15,000 ரூபாய் பணமும் பால்மா உள்ளிட்ட பொருட்களும் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அலைபேசி உறைகளும் திருட்டுப் போயுள்ளன.
வழமை போன்று புதன்கிழமை (23) இரவு தங்களின் கடைகளை மூடிவிட்டுச் சென்றதாகவும் கடைகளைத் திறப்பதற்காக இன்று வியாழக்கிழமை காலை வந்தபோது, கடைகளின் கூரைகளைப் பிரித்துத்துகொண்டு திருடர்;கள் உள்நுழைந்து திருடியமை தெரியவந்துள்ளதாக பொலிஸில் அவற்றின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025