Suganthini Ratnam / 2016 நவம்பர் 28 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட மற்றைய மாணவனின் சடலம் அக்கடற்கரையில் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பங்குடாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன்; (வயது 17) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்டகப்பட்டுள்ளது.
புன்னைக்குடாக் கடலில் மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை (25) மாலை நீராடிக்கொண்டிருந்தபோது, 03 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் பாதுகாப்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் அன்றையதினம் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏனைய இரு மாணவர்களையும் தேடிவந்த நிலையில், மிச்நகரைச்; சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) என்பவரின் சடலம் சனிக்கிழமை (26) மாலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago