Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல், அஹமட் அனாம்
தமிழ், முஸ்லிம் என்ற வேற்றுமையுடன் அரசியல் செய்பவர்கள், எதிர்வரும் தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்படுவர். முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த நான் இப்பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக தெரிவுசெய்யப்பட்டமை தமிழ் மக்களுடைய அபிவிருத்திகளை இல்லாமல் செய்வதற்கான ஒரு செயற்பாடாகும் என தமிழ் அரசியல்வாதி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஒரு அசிங்கமான அரசியல் செயற்பாடாகும் என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பில் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலர் பாடசாலை கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தழிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு அப்பால் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரின் வேண்டுகோளின் அடிப்படையில் நாங்கள் இந்த பட்டிருப்பு தொகுதியில்தான் முதலாவது சதொச நிலையத்தை திறந்து வைத்துள்ளோம்.
இந்த மாவட்டத்திலே தமிழர்கள், முஸ்லிங்கள், சிங்களவர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் அனைத்து அபிவிருத்திகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் எமது நல்லாட்சி அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சாதி, மத பேதங்களுக்கு அப்பாலிருந்து சேவை செய்யும் எம்மைப்பார்த்து ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருப்பதானது அசிங்கத்தையும் அருவருப்பையும் தரும் செயலாக இருக்கின்றது.
மட்டக்களப்பிலுள்ள சில அதிகாரிகளை அமைச்சர் அமீரலி பந்தாடுவதாக அண்மையில் ஓர் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு எழுத்தக்கூடிய ஊடகவியலாளர்கள் யாராக இருந்தாலும் நேரில் வந்தால் அவ்வாறான அதிகாரிகளின் விவரங்களை நாம் விவரித்துக்காட்டுவோம்.
அரசாங்க அதிகாரிகள் மக்களின் துயர் துடைப்பவார்களாக இல்லாமல், மண் வியாபாரம் செய்வதற்கும் மாட்டு வியாபாரம் செய்வதற்கும் வந்தவர்களாக இருக்கக்கூடாது, என்பதில் நான் மிகவும் தெளிவுடன் செயற்பட்டு வருகின்றேன். மக்களின் வரிப்பணத்தில் சம்மபளம் பெற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள், மக்களைத் துவம்சம் செய்து பேதமை காட்டி அரசியல் வாதிகளிடத்தில் வேறுபாடு காட்டி செயற்படக்கூடாது.
இந்த மாவட்டத்திலே பாதிக்கப்பட்டவர் ஒரு முஸ்லிமா அல்லது தமிழரா என்பது கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டும் என்பதில் உறுதியுடன் செயற்படுபவர்கள் நாங்கள். மாவட்டத்திலே உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் அதிகாரிகள் எம்மிடம் பேசலாம். எனவே, வெளிநாடுகளிலே உள்ள இணையத்தளங்களில் எம்மைப்பற்றி எழுதுவதால் எமக்கு ஒன்றும் ஆகப்போவது கிடையாது.
எதிர்காலத்தில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்து இப்பிரதேச மக்களுக்கு என்ன தேவைகள் உள்ளன என்பதையெல்லாம் அறிந்து அவைகளை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் ' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago