2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

14 ஹோட்டல்களுக்கு பூட்டு

Niroshini   / 2016 நவம்பர் 19 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் காணப்பட்ட 14 ஹோட்டல்கள் மற்றும் உணவங்களை மூடியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சிற்றுண்டிச்சாலைகளில் நேற்று (18) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை திடீர் பரிசோதனை நடிவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளிலுள்ள 75 ஹோட்டல்கள்,உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் காணப்பட்ட 14 ஹோட்டல்கள், உணவங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் அந்த உணவகங்களில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்திக் கொண்டு பொதுச்சுகாதர பரிசோதகர்களிடம் காண்பித்து, அவர்களின் பரிசேதனையின் பின் மீண்டும் திறக்குமாறு அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது மனித பாவனைக்குதவாத பல உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X