2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மட்டக்களப்பு சிறைக்கைதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க அகிலன் பௌன்டேசன் அனுசரணையுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனினால் இந்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அகிலன் பௌண்டேசன் பணிப்பாளர் கோபாலக்கிருஸ்ணன் மற்றும்  சிறைச்சாலையின் பிரதம  அதிகாரி இந்திரகுமார், சிறைச்சாலை பிரதி அதிகாரி மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .