2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Super User   / 2011 மே 01 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஓட்டமாவடி, மீராவோடை பகுதியில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 48 வயதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கும் படி நீதிபதி வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவு தொடர்பாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த சந்தேகநபரை மே 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த யுவதி திடீர் மயக்க முற்றதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 5 மாதங்களுக்கு முன்பாகவே கர்ப்பம் தரித்துள்ளமை கண்டறியப்பட்டது.


  Comments - 0

  • Naseem Sunday, 01 May 2011 07:55 PM

    உன்னையெல்லாம் சும்மா விடக் கூடாது.

    Reply : 0       0

    xlntgson Sunday, 01 May 2011 08:53 PM

    Naseem - நீங்கள் தமிழ் மிரருக்கு புதுசோ? பழைய செய்திகளை புரட்டிப் பாருங்கள் நான் வரி வரியாக விலா வாரியாக- கற்பழிப்பு, பால் வன்முறை, ஒருபாற் சேர்க்கை, நெருங்கிய உறவினரிடையேயான அதீத உறவுகள், பொருந்தாக் காமம் என்று வரிந்திருக்கின்றேன்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .