2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அதிபர் இடமாற்றத்தை கண்டித்து எதிர்ப்பு பேரணி

Super User   / 2011 மே 02 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுவதற்காக பிரதேசத்திலுள்ள சிலரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்ட கவனயீர்ப்பு எதிர்ப்பு பேரணி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்புப் பேரணி பாடசாலைக்கு முன்னால் அமைதியான முறையில் இடம் பெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள் "சிறப்பாக நடைபெறும் பாடசாலையை சீர்குளைக்காதே", "பெண்கள் பாடசாலையின் வளர்ச்சியைக் கெடுக்காதே", "சிலரின் குரோத நடவடிக்கைகளுக்கு கல்வி அமைச்சும் மற்றும் அதிகாரிகளும் துனை போகவேண்டாம்", என்று எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தி தங்களது எதிரிப்பினை  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .