2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சிறுபோக வேளாண்மையில் விவசாயிகள் மும்முரம்

Suganthini Ratnam   / 2011 மே 04 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின்  வெல்லாவெளி, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, மண்டூர், கமநல கேந்திர நிலையப் பிரதேசங்களில் சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.

நிலம் பண்படுத்தல், விதைத்தல், பசளை இடுதல் போன்ற நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட களுதாவளை, காந்திபுரம், தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில்  மிளகாய், கத்தரி, வெண்டி, பாகல் போன்ற  பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .