2026 மே 14, வியாழக்கிழமை

dd

இலவச கண் பரிசோதனை முகாம்

Super User   / 2012 ஜனவரி 31 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

ஜம்இய்யதுஸ் ஸபாபின் அனுசரனையின் கீழ் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்ற இந்த கண் பிசோதனை வைத்திய முகாமில்; பாகிஸ்தான் நாட்டின் இப்ராஹிம் கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் அலி ஷியா கண் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தார்.

சுமார் 160 நோயாளர்களை பரிசோதனை செய்த கண் வைத்தியர், இதில் கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை 69 பேரை இனங்கண்டு அவர்களில் பேருக்கு இலவசமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளதாக கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப் பிரிவின்இணைப்பாளர் மௌலவி எஸ்.எச்.எம். அறபாத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .