2026 மே 14, வியாழக்கிழமை

தாவர போசனைத் திட்டத்தில் கீழ் வாகரை பிதேச செயலாளர் பிரிவில் விதை நெல் அறுவடை

Kogilavani   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)
'நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' வேலைத் திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஒருங்கினைந்த தாவர போசனைத் திட்டத்தில் நிலக்கடலையும்,   நெல் அறுவடை விழாவும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மீள்குடியேற்றக் கிராமமான ஆளங்குளம் கிராமத்தில்; விதை நெல் அறுவடையும், குகநேசபுரம் கிராமத்தில் நிலக் கடலை அறுவடையும் இடம்பெற்றது.

மாங்கேணி விவசாய போதனாசிரியர் எச்.எம்.எம்.இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா மற்றும் பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டனர்.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .