2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடியில் மூன்றரை கிலோ கஞ்சா மீட்பு

Super User   / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மூன்றரை கிலோ கஞ்சா நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி, டீன் வீதியிலுள்ள வீடொன்றிலிருநதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வீதியின் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .