2026 மே 09, சனிக்கிழமை

போரதீவு பற்று பிரதே செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு,  போரதீவு பற்று பிரதே செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் போரதீவுப் பற்று – வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ப்பட்டன.

இக் கூட்டத்தில் மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பிரதேச செயலாளர் உதயசிறிதர், நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா,  மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், எட்வின்கிருஸ்ணானந்தராசா  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் பொலிஸ் பொறுப்பதிகாரி, வெல்லாவெளி பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0

  • Iya Wednesday, 15 February 2012 11:47 PM

    அபிவிருத்திக்கூட்டம் கூடுவது முக்கியமில்லை . உண்மையான அபிவிருத்தி நடைபெற வேண்டும் . மக்களின் மீள்குடியேற்றம் திருப்திகரமாக இல்லை. முன்னாள் பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கணேசலிங்கம் அவர்கள் எல்லைக்கிராமன்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றினார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .