2026 மே 09, சனிக்கிழமை

பாதை சீரின்மையால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி, வெலிக்காக்கண்டி கிராமங்களுக்கான பாதை சீரின்மையால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைகள் பாதிக்கப்படும் நிலைமையேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பாதைகள் சீரின்மையால் நெல் அறுவடைக்குரிய  வாகனங்களை கொண்டுசெல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இதனால் வேளாண்மைகள் நிலைமையேற்பட்டுள்ளதாகவும்  அவ்விவசாயிகள் குறிப்பிட்டனர்.

மீள்குடியேற்றப்பட்ட கோப்பாவெளி, வெலிக்காக்கண்டி பிரதேசங்களில் யுத்தகாலத்தின்போதும் ஒழுங்கான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.  மீள்குடியமர்த்தப்பட்ட பின்னரும் இப்பிரச்சினைகள் தொடர்வது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .