2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டு. மாவட்டத்தில் உள்ளூராட்சி சட்டமூலம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சட்டமூலம் தொடர்பான செயலமர்வுகள் உள்ளூராட்சி திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு மண்முனைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கிறிஸ்டினா சசிகரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்  எஸ்.சத்தியானந்தி, மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.சிவலிங்கம், பிரதேச சபையின் செயலாளர் சி.ஜே.அருள்பிரகாசம்,  பிரதேச சபை உறுப்பினர்கள், அதன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .