2026 மே 09, சனிக்கிழமை

வெல்லாவெளி கொலை தொடர்பில் ஒருவர் கைது

Super User   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை கிராமத்தில் மீட்கப்பட்ட சடலத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆனைகட்டியவெளி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வெல்லாவெளி பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடபர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை தேடி வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை கிராம தோட்டமொன்றிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒல்லிமடுவாள் கிராமத்தை சேர்ந்த 52 வயதான கணேசமூர்த்தி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .