2026 மே 09, சனிக்கிழமை

வெல்லாவெளியில் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு போரதீவுப் பற்று -வெல்லாவெளி பிரதேச செலயகப்பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை, ஆனைகட்டியவெளி, மலையர்கட்டு ஆகிய கிராமங்களில் பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டது.

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்  நடமாடும் சேவையில், வெலகெதர வெல்லாவெளி பிரதேச செயளாளர் உதயசிறிதர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே, பொலிஸ் பொறுப்பதிகாரி, வெல்லாவெலி பிரதேச சபை தலைவர் க.சிறிதரன் உட்பட வைத்தியர்கள், கிராமசேவகர்கள் எனப் பலரும் கலந்துகெண்டனர் .   

இதன்போது, வைத்திய முகாம், மூக்குக் கண்னாடி வழங்கல்,  திருமணப் பதிவுகள், பொலிஸ் பதிவுகள், பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள், அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .