2026 மே 09, சனிக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை துறையினர் நடத்தும் ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை துறையினர் நடத்தும் ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 திகதி வரை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைக்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஓவியர்களான கமலா வாசுகி, கிக்கோ, சுசிமன் நிர்மலவாசன் ஆகியோர்களினது ஓவியங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஓவியர் செல்லையா டானியல், சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடாதிபதி மா.செல்வராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .