2026 மே 09, சனிக்கிழமை

dd

தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் விஞ்ஞானக்கூடம் திறப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூட அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூடத்தை திறந்து வைத்ததோடு மாகாண மற்றும் தேசிய ரீதியில் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசில்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வுக்கு வலையக்கல்வி பணிப்பாளர், செங்கலடி உதவி பிரதேச செயலாளர் சித்திரவேல், ஏறாவூர்பற்று பிரதேச தவிசாளர் வினோத்,   கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .