2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டக்களப்பில் முதலீட்டாளர் தினம்

Kogilavani   / 2012 மார்ச் 04 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில், முதலீட்டாளர் தினம் நேற்று சனிக்கிழமை தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை பிணையங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளனமும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி செல்வேந்திரன், மட்டு விவசாய கைத்தொழில் சம்மேளன தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட விவசாய கைத்தொழில் சம்மேளன பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பங்குச் சந்தை முதலீடு தொடர்பான ஆலோசணைகளும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .